Thursday, December 2, 2010

கணபதியின் புதிய பன்றி அவதாரம்..!


யானைமுகத்தோன் கணபதியின் பக்தர்கள் யானையின் முகத்துடன் கூடிய மனித உருவத்தை எப்படி நம்பி வணங்கலாம் என்று நாத்திகவாதிகளால் பலகாலமாக பரியாசம் செய்யப்படுகின்றனர்; ஆனால் அவர்களையெல்லாம் அகமகிழச் செய்யும் அற்புதமான செய்தியை அண்மையில் கேள்விபட்டோம்; அது யானைமுகத்தில் ஒரு பன்றி குட்டி பிறந்திருக்கிறது என்பதே; இனி அந்த யானைமுகத்தோனை வணங்குவது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாதல்லவா? 


மேலும் இதேபோன்று மனிதக் குழந்தைகளும் யானைமுகத்துடன் பிறக்கத் துவங்கிவிட்டால் கணபதியின் பக்தர்கள் இன்னும் அதிக எழுச்சியடைந்து முச்சந்திக்கு முச்சந்தி அவனை நிறுத்தி குனிவார்கள்; யானைமுகத்தில் பிறக்கும் குழந்தைகளையும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் வைத்திராமல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்று நம்புவோம்.

 பன்றிக்கு கூட்டத்துக்கு யானைமுகத்தில் பிறந்த அந்த விநாயகனைக் குறித்து என்ன தெரியும்? எப்படியிருந்தாலும் தமிழனுக்கு ஒரு புது சாமி கெடச்சிடுத்து என்பதே உண்மை..!

http://www.dinakaran.com/Citizen-journalism/viewphoto.aspx?id=562