Thursday, October 21, 2010

உலகம் அழியுமா?


// உங்களுடைய இருக்கிற தெய்வத்தை வைத்து, சந்திரனையும், சூரியனையும் இயக்குகிற தெய்வத்தை வைத்து, தொடர்ச்சியாக சந்திரன் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி, மாதத்தின் எல்லா நாட்களிலும் முழு நிலவாக ஒளி தரும்படி ஒரு ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக் இப்படி ஒளி விடும்வடி செய்து காட்டுங்கள் //

அண்ணா,நீங்க கேட்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது;ஒரே சிரிப்பாக வருகிறது;உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இறைவன் முடிவுசெய்துவிட்டால் அதனைப் பார்த்து இறைவனை ஏற்றுக்கொள்ள இந்த உலகில் எந்த உயிரினமும் இருக்காது;ஏன் இந்த உலகமே இருக்காது ; அறிவுபூர்வமான கேள்வியைத் தான் கேட்கிறீர்களா?

அந்த நாளும் விரைவில் வருகிறது , இதுவரை தமது சிருஷ்டிகள் மூலம் மனிதனுடன் போராடிக் கொண்டிருந்த இறைவன் தமது அனைத்து இரக்கத்தையும் அடைத்துக் கொண்டு இந்த கீழ்ப்படியாத உலகை நியாயந்தீர்க்க இறங்கும் நாளில் தங்கள் வேண்டுகோள் அற்புதமாக நிறைவேறப்போகிறது; அது நீங்கள் எதிர்பார்ப்பதைவிட இன்னும் பயங்கரமாக இருக்கும் .

இது பழைய ஏற்பாட்டின் "யோவேல்" எனும் புத்தகத்திலிருந்து...

Joe 2:30  வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
 
Joe 2:31  கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
 
Joe 2:32  அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

இது பழைய ஏற்பாட்டின் "செப்பனியா "எனும்  புத்தகத்திலிருந்து...
 
Zep 1:1  ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.
 
Zep 1:2  தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Zep 1:3  மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Zep 1:4  நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
 
Zep 1:5  வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
 
Zep 1:6  கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.
 
Zep 1:7  கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
 
Zep 1:8  கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.
 
Zep 1:9  வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.
 
Zep 1:10  அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Zep 1:11  மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.
 
Zep 1:12  அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மை செய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன்.
 
Zep 1:13  அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.
 
Zep 1:14  கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.
 
Zep 1:15  அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.
 
Zep 1:16  அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள்.
 
Zep 1:17  மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.
 
Zep 1:18  கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார் .

சாமியின் சேலையை அவிழ்க்கும் பூஜாரிகள்..!

// பிற மதத்தவரின் தெய்வங்களை சகித்துக் கொள்ள இயலவில்லை. பிற மத தெய்வங்களை இகழத் துடிக்கிறீர்கள் //


அண்ணா, தாங்கள் குறிப்பிட்ட கருத்து அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது ;தெய்வம் என்பவர் தமது சிருஷ்டியைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவர்; அந்த நிலையிலிருந்து அவர் தமது தன்மையை மனிதனுக்கு தமது சிருஷ்டிகள் மூலம் விளக்குகிறார் .

ஆனால் மனிதர்களே தெய்வத்தின் தன்மையைக் குறித்த தவறான அபிப்ராயத்தினால் அவரை கீழ்த்தரமாக சித்தரிக்கிறார்கள் என்பதே எனது வேதனை.

நேற்று கூட ஒரு நண்பர் மாதாவின் சிலைக்கு மாலை 7 மணிக்கு அனைவர் கண் முன்பும் சேலை கட்டிவிடுகிறார்; இது என்ன பயங்கரம் , ஒரு இந்து பூஜாரி கூட இதுபோல செய்யத் துணியமாட்டாரே..!

அங்கு என்ன நடக்கிறது ,சாமி சிலைக்கு முன்பகுதியில் ஒரு திரைச்சீலை இருக்கும் ; அதன் மறைவில் சென்றே (பக்தைக்கும் சேர்த்து..? ) சேலை கட்டுவார் , பூஜாரி.

சரி ,தற்கால வாழ்க்கையின் நடைமுறையில் யார் யாருக்கு சேலை கட்டுவார் , அவிழ்ப்பார் ,மாற்றுவார் என்று சிந்திப்போமா?

ஒரு கணவன் மாத்திரமே காதலுக்காகிலும் மனைவியின் சுகவீனத்தின்போதும் இதனைச் செய்வார்; அல்லது ஒரு மகன் வயதான தாய்க்கு அவள் கைகால் தளர்ந்தோ படுக்கையிலோ இருக்கும் போது சேலை கட்டிவிடுவா
ன் ; பொதுவாக சேலை கட்டும் (ஆடையணியும் ) நோக்கமே நிர்வாணத்தை மறைக்கவே .

எல்லாம் படைத்த சாமிக்கு ஏது நிர்வாணம் ,மனிதனுக்கு ஆடையணிவித்த சர்வ வல்லவர் அவர் தனக்கேற்ற உடையை அணிந்திருக்கமாட்டாரா?

ஒரு பெண் ஒருபோதும் வேறொரு ஆடவனிடம் சேலைக் கட்டிக்கொள்ளவே மாட்டா
ள் ;அல்லது பெண்கள் பருவமெய்திய இளங்குமரத்திகளுக்கு சேலை கட்டுவதுமுண்டு .

அப்படியானால் பராசக்தி என்று உயர்த்தி வைத்து ஆராதிக்கப்படும் ஒரு
பெண் தெய்வம் எந்த அடிப்படையில் ஒரு ஆடவன் தன் சேலையை மாற்ற அனுமதிக்கிறது ?

ஒவ்வொரு பக்தனும் இதனை யோசிக்கவேண்டும்.

Friday, October 15, 2010

"நன்னு" இப்ப நன்னாயில்ல‌..!

"அந்த ஃபாதர் என்னைக் கெடுத்துட்டாரு" கன்னியாஸ்திரீ அலறல்..!
-தினமலர் செய்தி..!
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=105920 


"நன்னு" இப்ப நன்னாயில்ல‌..!
கொஞ்சம் "மிஸ்" ஆனா..? 
மிஸஸ் தான்..!

Tuesday, October 12, 2010

" ப்ரஜாபதி" யார்..?

October 8, 2010 12:02 AM
தனபால் said...

// இந்தப் ப்ரஜாபதி என்பவர் யார்??? இயேசு கிறிஸ்துவா? கர்த்தரா? கூறுங்கள். இந்தப் ப்ரஜாபதிக்கு மனைவிகள், மற்றும் பல குழந்தைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா??? முதலில் இந்தப் பிரஜாபதி பற்றி உங்கள் விளக்கம் என்ன? என்று கூறுங்கள். பிறகு விவாதிக்கலாம். //

சிவனின் மூத்த மகன்;;; கணங்களுக்கெல்லாம் தலைவன்;; அதனால் கணபதி;; இவரின் பிறப்பை பற்றி பல கதைகள் உண்டு;;

1. பார்வதியும் சிவனும் யானைகளாக மாறி விளையாடும்போது, பார்வதி கருவுற்று, பிறகு பிறந்தவன் கணபதி.(உத்ர ராம).

2. ஒரு முறை பார்வதி சனிகோளை கணபதிக்கு காட்ட, அதன் சக்தியால் இவன் தலையை இழக்க, ஒரு யானையின் தலையை வைத்தனர்;;

3.பார்வதி குளிக்கும் போது, கணபதி காவலிருக்க, அச்சமயம் சிவன் வர, அவன் தடுக்க, அதில் மூணட போரில் கணபதியின் தலையை சிவன் துண்டிக்க, பிறகு அவரே வருந்தி ஒரு யானையின் தலையை வைத்தார்.(பத்ம புரா).

கைலாயத்தில் பரசுராமர் வர, அச்சமயம், சிவன் உறங்கி கொண்டிருக்க, கணப்தி அவரை தடுக்க, அவர் கணபதியின் தந்தங்களை உடைத்தார்.(பத்ம புரா);;

தென்னிந்தியாவில் வறட்சி நிலவ, அகஸ்தியர் அதை சிவனிடம் கூற, அவர் அச்சமயம் தொழ வந்த காவிரியை அகஸ்தியரின் கமண்டலத்தில் போட, பிறகு அகஸ்தியர் தவம் செய்யும் போது கணபதி  காகம் வடிவில் வந்து , கமண்டலத்தை உருட்ட, காவிரி பெருகி ஓடியது;;

கண்பதிக்கும், சுப்ரஹ்மண்யனுக்கும் திருமண ஆசை வர, சிவன் பார்வதி இருவரும் அவர்களிடத்தில் "யார் உலகம் முழுமையையும் சுற்றி முதலில் வருகிறானோ அவனுக்கே திருமணம்" என்றனர்.

கந்தன் மயிலில் ஏறி சுற்றி வர, கணபதி  தன் பெற்றொர்களை வலம் வந்து , " இந்த அண்டசராசரமே உங்களுள் உள்ளது. ஆகையால் உங்களை சுற்றினால் போதும் " என்றான். அவர்கள் மகிழ்ந்து அவருக்கு சித்தி, புத்தி என்ற இரு பெண்களை மணமுடித்தனர். நமக்கு தெரிந்த கதையில் மாம்பழத்திற்காக நடந்ததே தெரியும்;;

இந்திரன், தேவர்களின் படைத் தலைவனாக கந்தனை ஏற்று, விழா நடத்தும்போது அவனின் கைகள் மரத்துப் போயின;; அவன் தவிக்க, சிவன் எல்லா காரியத்திற்க்கும் முதலில் விக்னங்களை தீர்க்கும் விநாயகனை, தொழுது செய்யவேண்டும்; இந்திரன் அவ்வாறே செய்ய, அவன் கைகள் பலம் பெற்றன;;

வ்யாசர் பாரதம் எழுத நினைக்க, அவர் ப்ரம்மாவிடம் தனக்கு ஒரு ஆள் எழுத வேண்டும் என வேண்ட, அவர் கணபதியை அனுப்பினார். கணபதி  வ்யாசரிடம் " எழுதுகிறேன், ஆனால் நிறுத்தாமல் சொல்லவேண்டும். நிறுத்தி விட்டால் எழுத மாட்டேன்" என்றார். அதற்கு வ்யாசர் "பொருள் தெரிந்து எழுதிக் கொண்டே வந்தால் நான் தயார்" என்றார். இவ்வாறு பாரதம் எழுதப்பட்டது;;

ஆதி சங்கரர் கணபதியை தொழும் மதத்திற்கு "காணபத்யம்" என பெயரிட்டார். மற்ற விவரங்களுக்கு கணேச புராணம் பார்க்கவும்.

-இது "கணபதி" என்ற ஒரு சொல்லுக்கு ஒரு குறிப்பிட்ட தளத்தில் பெற்ற பதிலாகும்;இது அனைத்தும் உண்மை என்றோ இதில் ஏதோ ஒன்று உண்மை என்றோ கூறினால் எதை உண்மை என்று கொள்ளமுடியும்?

அப்படியானால் ஏன் அந்த உண்மையற்ற பொருளை வணங்குகிறோம்?

சமுதாய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அறிவுக் கண்ணைக் குருடாக்கிக் கொண்டு வணங்கிக் கொண்டிருக்கிறோம்;

இந்த அறிவுக் கண்ணைத் திறக்கவே இயேசுவானவர் தமது அடியவரை அனுப்புகிறார்;
தற்காலத்தில் மிகப் பிரபலமாக வணங்கப்படும் கணபதிக்கே இத்தனை விளக்கங்கள் என்றால் விளக்கம் சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்களும் மொழியியலாளர்களும் வேத சுலோகங்களுக்கு  சரியான பொருளை தேவபக்தியுடன் சொல்லகூடிய உண்மையாளர்களும் மறைந்துபோன ஒரு வேதத்துக்கு யார் சரியான பொருளை சொல்லிவிடமுடியும்?

"ப்ரஜாபதி" எனும் குறிப்பிட்ட சொல்லின் அர்த்தமும் அந்த ப்ரஜாபதியின் குறிப்பிட்ட குணாதிசயங்களும் அதாவது பலியாக வேதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ப்ரஜாபதியின் 9(நபர்களல்ல‌) தன்மைகளும் இயேசு ஒருவருக்கே பொருந்துவதால் சாது செல்லப்பா போன்ற வேத விற்பன்னர்கள் அதனை எடுத்து கூறினார்கள்;

மற்றபடி என்னைப் போன்றோர் ப்ரஜாபதியில் இயேசுவைக் காணவில்லை; அரைகுறையாக இங்கே சொல்லப்பட்ட புனையப்பட்ட "ப்ரஜாபதி"யின் சில குணாதிசயங்களை இயேசுவில் காண்கிறோம்,அவ்வளவே;

நான் என் பாட்டியைப் போல இருப்பதாகக் கூறுவதற்கும் என் பாட்டி என்னைப் போல இருப்பதாகக் கூறுவதற்குமுள்ள வித்தியாசமே இதிலும் உண்டு; யாரை வேண்டுமானாலும் இயேசுவுடன் ஒப்பிடலாம்,தள்ளிவிடலாம்;
யாருடனும் இயேசுவை ஒப்பிட இயலாது;அவர் சத்தியமானவர்,ஈடிணையில்லாதவர்.

'ப்ரஜாபதி' என்று யாரும் கிடையாது;ஆனால்
இயேசுவானவர் வரலாற்று புருஷர்;

'ப்ரஜாபதி' மனுக்குலத்தின் ஏக்கம்;ஆனால்
இயேசுவானவர் நிறைவேறிய இறைவாக்கு;

'ப்ரஜாபதி' யாரோ எனக்கு கவலையில்லை;ஆனால்
இயேசுவானவர் யார் என்பது எனக்குத் தெரியும்.

'ப்ரஜாபதி'யின் கதையை மெய்ப்பிக்க இயலாது;
இயேசுவானவரின் தியாகத்தை பொய்யாக்க இயலாது;

இன்னும் ஒவ்வொரு இந்து தெய்வத்தின் பெயரிலும் (கணபதி,விநாயகர்,முருகன்,பிள்ளையார்,தாயுமானவர்,நாராயணன்,வேங்கடாஜலபதி....) இயேசுவின் செயல் இருக்கிறது என்று நான் தியானித்து அது இயேசுவில் மட்டுமே நிறைவேறியது என்று கூறினால் அப்படியானால் இவர் தான் அவரா என்பதோ அவர்தான் இவரா என்பதும் மதியீனமாகும்,குழப்பிக் கொள்ளக்கூடாது.


http://christianbrahmin.blogspot.com/2010/10/blog-post.html

Thursday, October 7, 2010

இன்று மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

 அக்டோபர் 07,2010

இன்று மகாளய அமாவாசையை யொட்டி வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறந்தவர்களுக்கு மகாளயம் என்று போற்றப்படுவது மகாளய அமாவாசை ஆகும். மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசைகளில் திதி கொடுத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம் ஆகும். இப்படி திதி கொடுப்பதால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.

முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்து அல்லது முடியாமல் போனால் மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் அனைத்து அமாவாசைகளிலும் திதி கொடுத்த பலன் கிடைக்கும். இப்படி சிறப்பு பெற்ற மகாளய அமாவாசையையொட்டி இன்று கடல், ஆறுகளில் பக்தர்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

சென்னை :  மகாளய அமாவாசையை ஒட்டி, இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, வழிபாடு செய்யப்படுகிறது. புரட்டாசி மாதம் பவுர்ணமி முதல் அமாவாசை வரும் 15 நாட்களும் மகாளயபட்ச காலம். இந்த நாட்களில், அந்தந்த திதிக்கு உரிய, தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் இந்துக்கள் மத்தியில் உள்ளது.

அதிலும் மகாளயபட்சத்தின் இறுதி நாளான மகாளய அமாவாசை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.அந்த வகையில், மகாளய அமாவாசை தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள். மகாளய அமாவாசையை ஒட்டி, இன்று கடற்கரை, ஆறு போன்ற இடங்களில், புனித நீராடியும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபாடு செய்வர். கோவில்களுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பசுவிற்கு அகத்திக்கீரை, உணவு கொடுத்தும் வழிபாடு நடத்துவது உகந்தது.  இதனால், இன்று ஏராளமான பொதுமக்கள், புனித தலங்களில் முன்னோர் வழிபாடு நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://img1.dinamalar.com/kovilimages/news/TN_111611000000.jpg


இதைக் குறித்து  நான் ஏற்று சேவிக்கும் குருபஹ‌வான் ஆன மகாபிரபுவான இயேசுவானவர் கூறுவதென்ன என்று ஆராய்ந்தேன்; பின்வரும் வேதப்பகுதியில் அதைக் குறித்து சில காரியங்கள் கிடைத்தது; அந்த வேதப்பகுதியை வாசித்தபிறகு எனது கருத்தை முன்வைக்கிறேன்.

"எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.

நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி,

அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்;

நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்." (மாற்கு.7:10 ‍ முதல்13 வசனங்கள்)
 
மேற்காணும் வேத வாக்கியங்களின்படி நாம் அறிவதென்ன, நீண்ட நெடுங்காலமாக முன்னோர்க்கு மரியாதை செய்வதும் அவர்கள் காலத்துக்குப் பிறகும் அவர்கள் நினைவைப் போற்றி தர்ப்பணம் செய்வதும் நமது கலாச்சாரத்தில் இருக்கிறது என்பது வெளிப்படையானது;

ஆனாலும் இந்த தர்ப்பணம் செய்வதின் உண்மையான பொருள் என்ன‌?
ஐதீகம் என்று விலகிச் சென்று விடாமல் நின்று யோசித்தால் சில உண்மைகள் வெளிப்படும்;

தர்ப்பணம் செய்வதின் மூலம் முன்னோர்களுக்கு மரியாதை செய்வது போலத் தோன்றினாலும் அவர்களுடைய நல்வினை தீவினையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே மைய நோக்கமாக இருக்கிறது;

ஏனெனில் நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல காரியங்களை மூடநம்பிக்கை என்று நம்முடைய சமுதாயம் சொன்னாலும் மாறாத வேத சத்தியங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே நிதர்சனமான உண்மையாகும்;

அதாவது நம்மைப் பெற்ற தாயோ தகப்பனோ அவர்கள் நம்முடன் வாழும் காலத்தில் நாம் எவ்வளவுதான் அவர்களைத் திருப்திபடுத்த முயற்சித்தாலும் அவர்களுக்கு நம்முடைய‌ சிறுவயதிலிருந்தே நம்மீது பல வருத்தங்கள் இருந்திருக்கும்;மேலும் அவர்களது இறுதிக்காலத்தில் நாம் அவர்களுக்கு செய்யத்தவறிய சில புண்ணியங்களும் இருந்திருக்கும்;அந்த கணக்கைத் தீர்த்துக் கொள்ளும் பரிகாரப் பூஜையாகவே இந்த மகாளய அமாவாசை தர்ப்பணம் விளங்குகிறது;

குருபஹ‌வான் இதையே கண்டிக்கிறார்;நீ உன் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் அதற்கு இணையாக வேறு ஏதோ ஒரு சடங்கை செய்துகொண்டிருக்கிறாய் என்கிறார்;ஏனெனில் பெற்றோரை கனம்பண்ணுவது பத்து கட்டளைகளில் பிரதானமானதாம்;

"பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது."(எபேசியர்.6:1,2,3)
மேலும் இந்த தர்ப்பண பூஜையின் மற்றொரு விசேஷம் முன்னோர் தம் நல்வினை தீவினை நம்மை பாதிக்கக்கூடாது என்ற சுயநலமாகும்;இவ்வுலகைவிட்டு கடந்து செல்லும் ஆன்மாக்கள் சாந்தியடையாவிட்டால் மீண்டும் நம் வீடுகளுக்கு வந்து தீமை செய்துவிடுமோ என்ற அச்சத்தினால் அவர்களை பரகதிக்குள் இங்கிருந்து முயற்சித்து தள்ளுவது போன்ற நிகழ்ச்சியே இது;

அப்படியானால் முன்னோரின் நல்வினை தீவினை அவர்தம் பின்னடியாரை பாதிக்கும் என்ற உண்மையையும் நாம் அறிகிறோம்;நல்வினை நம்மை அடைந்தால் ரொம்ப சந்தோஷம்;ஆனால் தீவினையைத் தவிர்க்க என்ன செய்வது? அவர்களுக்கும் நமக்குமான உறவை அறுத்துவிடுவது தான் ஒரே வழி;அந்த நிகழ்ச்சியே இந்த தர்ப்பணம்.

இதன்மூலம் ஒரு மனுஷன் என்ன சொல்லுகிறான்,என்னுடைய நல்வினை தீவினையின் பலனை நான் கவனித்துக் கொள்ளுகிறேன்;நீ என் வாழ்க்கையில் குறுக்கிடாதே,நீ வைகுண்டத்துக்குச் சென்று ஓய்வெடு" என்கிறான்;

அப்படியானால் நமக்கு அருமையான உறவுகளையே குட்டிசாத்தான்களாக்கி காசுபார்க்கும் போலி சாமியார்களின் சூழ்ச்சியை நாம் புரிந்துக்கொண்டு இந்த எல்லா கர்மங்களையும் தம்முடைய மாசற்ற இரத்தத்தால் பரிகரித்த குருபஹவான் இயேசுவையே சரணடையவேண்டும்; அமாவாசை இருளில் முணுமுணுவென்று எதையோ ஓதாமல் வெளிச்சத்துக்கு வர ப்ரஜாபதி அன்புடன் அழைக்கிறார்.

"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."(1யோவான்.1:7)