Saturday, December 26, 2009

‘நிஜம்’ – சன் டிவியின் தர்ம யுத்தம்..!

இந்து சமயத்தின் அருமை பெருமைகளைக் கட்டி காப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது,"தமிழ் ஹிந்து" இதுபோன்ற செயல்பாட்டுக்கு ஒவ்வொரு மத நம்பிக்கையாளருக்கும் முழு உரிமை உண்டு;


ஆனாலும் மாற்றுமத நம்பிக்கைகளை விமர்சிக்கும்போது உள்நோக்கத்துடன் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணம் தொடர்ந்து செயல்படும் போது அது மதப் பதட்டத்துக்கே வழிவகுக்கும்;

எந்த கட்டுரை எழுதினாலும் அதில் "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுதவதைப் போல" கிறிஸ்தவத்தை சம்பந்தப்படுத்துவதை "தமிழ் ஹிந்து" வழக்கமாகக் கொண்டுள்ளது; இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கும் விளக்கத்தையும் பதிக்காமல் புறக்கணிக்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் ஏற்கனவே இவற்றைப் பொருட்படுத்தாமல் கடந்துப்போகும் கொள்கையையே கடைபிடிக்கிறார்கள்;

இதுபோல ஒரு சிலர் கூறும் விளக்கத்தையும் புறக்கணிக்கும் போது சமுதாயத்தில் பதட்டம் உண்டாகவே இவை காரணமாகும்; தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள பிரபலமானவற்றை விமர்சிப்ப்து வழக்கமானதொரு தந்திரம்தான்; ஆனாலும் "தமிழ் ஹிந்து"வின் நிலைமை பரிதாபம்; நியாயமான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல இயலாமல் சப்பைக் கட்டுகட்டி ஒரு முழு நீள நகைச்சுவை கட்டுரையினை வரைந்திருக்கிறார்கள்,அதன் குழுவினர்;


"நிஜம்– சன் டிவியின் உண்மையான முகம்" என்ற கட்டுரையில்தான் இந்த சங்கடத்தைக் காண நேர்ந்தது; இது புலி வால் பிடித்த நாயர் கதையாகப் போகிறது; ஏனெனில் சன் டிவியில் அந்த தொடரைப் பார்த்தவர்கள் நேரடியாக அனைத்தையும் பார்த்து உணர்ந்துவிட்டார்கள்; இதற்கு மேல் விளக்கம் ஒன்றும் தேவையில்லை;

இதுவரை மறைக்கப்பட்டிருந்த வடதேச இரகசியங்கள் இன்றைக்கு சன் டிவியின் மூலம் மக்கள் அரங்கத்துக்கு வந்துள்ளது; சன் டிவிக்கும் வேறு வழியில்லை; எவ்வளவு நாளைக்குத் தான் மக்கள் சினிமாவையும் சீரியலையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; ஊடகங்களின் அடுத்த தலைமுறை வளர்ச்சி இப்படித்தான் இருக்கவேண்டும்; அதைப் பொறுத்தவரையில் இது சரியானதே;


இன்னும் அறிவியல்,விஞ்ஞான,மருத்துவ,கல்வி ஆராய்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் வரத்தான் போகிறது; அதன் ஆரம்பமே "நடந்தது என்ன","நம்பினால் நம்புங்கள்","நிஜம்" போன்ற ரியாலிட்டி "ஷோ"க்கள்;இதன் விளைவு மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்ட நாகரீக சமுதாயம் மலருவதே..!


அதிலும் காசி நடந்துக் கொண்டிருக்கும் அருவருப்புகள் உச்சக்கட்ட கொடுமை;அதற்கு என்ன சொல்லி மறைவு கட்டமுடியும்;"கைப்புண்ணுக்கு" கண்ணாடியா என்பார்களே,அதைப் போன்றதே இந்த காரியமும்.

உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால் படகோட்டிகளை மதம் மாற்றி "அகோரிகள்" பிணம் தின்னுவதை கிறிஸ்தவர்கள் தடுக்கிறார்களாம்..!

சன் டிவி சுட்டிக் காட்டிய அநியாயங்களை மிக அழகாக "தமிழ் ஹிந்து" தொகுத்துத் தருகிறது; இது ஒன்றே போதுமே, உண்மை எது பொய் எது என்று உணர்ந்துகொள்ள‌..!



சன் டிவி முன் நிறுத்திய காசி: நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியே காசி வருகிறார்கள். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களுக்காகவே இங்கு பல மடங்கள் இருக்கின்றன.

கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன. பிணங்கள் கங்கை நதியிலும் மிதக்கவிடப்படுகின்றன. 24 மணி நேரமும் கங்கைக் கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் காசி நகரத்தில் எந்த திசையில் திரும்பினாலும் சிதைகள் தான் எரிந்து கொண்டிருக்கின்றன.

கங்கைக் கரை முழுவதும் ‘அகோரிகள்’ எனப்படும் பிணம் தின்னும் சாமியார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் கஞ்ஜா, அபின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு போதையிலேயே இருக்கின்றார்கள். நடு இரவில் உடலெங்கும் திருநீறு பூசி, எரியும் சிதையிலிருந்து மாமிசம் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.

காசி நகரத்து இளைஞர்களும், வெளியூர்களிலிருந்து வரும் இளைஞர்களும் காசியில் சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி போதைக்கு அடிமையாகிறார்கள்.

புனித நதி என்று சொல்லப்படும் கங்கை அசுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த அசுத்த நதியில் குளித்தால் பாவம் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்றும், இங்கு வந்து திவசம் செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சந்தியடைந்து அவர்களின் சாபம் தீரும் என்றும் நம்பி ஏராளமான இந்துக்கள் காசி நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

// நடு இரவில் அகோரிகள் அலைந்து திரிந்து போதை வஸ்துக்களை உட்கொள்வதைக் காட்டினர். அகோரிகள் என்பவர்கள் ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. காபாலிகர்கள் என்பவர்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை.//



எது கட்டுக்கதை என்று உண்மையான பக்தர்கள் அறிவார்கள்.

// தலை முடி வளர்த்துக்கொண்டு, உடலெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, சதா சர்வ காலமும் போதை ஏற்றிக் கொண்டு இருக்கும் “நாகா” சாமியார்கள் இருக்கிறார்கள்.//

இதுவும் கலாச்சாரம் சார்ந்த உரிமையா?

//அவர்களும் பிரயாகை என்று சொல்லப்படும் அலகாபாத்தில் தான், அதுவும் கும்ப மேளா சமயத்தில் தான் இருப்பார்கள். பிறகு தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவார்கள்.//

தங்கள் இடங்களுக்குச் சென்று...எப்படி வாழுவார்கள்..?

//ஆனால் அவர்கள் சன் டிவி காட்டியதைப் போல் உடையணிந்தவர்கள் அல்ல. நிர்வாணச் சாமியார்கள். மேலும் அவர்கள் பிணம் தின்பவர்கள் அல்ல.//

ஏன் நிர்வாணமாக இருக்கவேண்டும்;இது காட்டுமிராண்டித் தனமல்லவா..?

//சன் டிவியிலும் ஒரே ஒருவரைத் தான் பிணம் தின்பதைப்போல் காட்டினார்கள். ஆனால் அவர் சாமியாரைப் போலல்லாமல் மொட்டைத் தலையராக இருந்தார். நெற்றியிலோ உடலிலோ திருநீறும் பூசியிருக்கவில்லை. மேலும் அவர் எரியும் சிதையருகே உட்கார்ந்து கொண்டு ஏதோ மாமிசம் ஒன்றை (ஆடோ, கோழியோ, ஏதோ ஒன்று) தின்பது போல் காட்டினார்களே ஒழிய, சிதையிலிருந்து அவர் நர மாமிசத்தை எடுத்து சாப்பிடுவதாகக் காட்டவில்லை.//

ஓஹோ,பிணத்தைத் தின்பதை "லைவ்" ரிலே பண்ணவேண்டுமோ? பாவம், படித்த நம்ம ஊரு பசங்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போய் அந்த சாமியார்களுக்கு கஞ்சா வாங்கிக் கொடுத்தோ பணம் கொடுத்தோ,கும்பிட்டோ தங்கள் காரியத்தை முடித்துக் கொண்டு வருகிறார்கள்;அவர்களிடம் போய் இதற்கு மேல் ஆதாரம் கேட்பது பாவமல்லவா?


வடதேசத்தில் சாயம் வெளுத்த "இந்துத்வா"அடிப்படைவாத குழுக்கள் தென் திசைக்குத் தங்கள் ஜாகையை மாற்றியுள்ளனர்;இங்கும் குஜராத் போல உத்திரபிரதேசத்தைப் போல ஒரு பதட்டத்தை உருவாக்கி குளிர்காய எண்ணுகின்றனர்;


தென்னகம் 2000 வருடங்களுக்கு முன்பே நல்லவர்கள் சிலர் வந்து கால்மிதித்த புண்ணிய பூமியாதலால் நல்ல கல்வியறிவும் கலாச்சாரமும் பெற்றுவிட்டது; இதற்கும் மேல் முன்னேறுவோமே தவிர பின்னுக்குச் செல்ல வாய்ப்பில்லை; எனவே இந்துத்வ குழுககளுக்கு பெரும் அவமானம் காத்திருக்கிறது என்பது நிச்சயம்..!


இங்கு இருக்கும் சில சலசலப்புகளுக்கும் காரணம்,கடவுள் மீதான மெய்யான பக்தியல்ல; கடவுள் பெயரால் நடக்கும் வசூல் சண்டையும் யார் பெரியவர்,யர்ர் புகழைப் பங்கு போட்டுக் கொள்வது என்ற போட்டிகளே..!

அவையும் சீக்கிரத்திலே துடைத்தெறியப்படும்;மதத்தின் மீதான மூடநம்பிக்கைகள் முழுவதும் வெளியாக்கப்பட்டு இந்தியத் துணை கண்டத்தில் ஒரு மாபெரும் திரு ஞான ஒளி பரவும்; அப்போது மக்களனைவரும் மெய்யான அந்த ஞான ஒளியினிடமாக ஈர்க்கப்படுவார்கள்; அப்போது இந்தியா உலகுக்கே வழி காட்டியாக அமைந்திருக்கும்; இதுவே எல்லாம் வல்ல இறைவனின் திருஉளச் சித்தமாகும்..!



Friday, December 25, 2009

‘நிஜம்’ – சன் டிவியின் உண்மையான முகம்

‘நிஜம்’ – சன் டிவியின் உண்மையான முகம்


இந்து மதம் என்கிற சனாதன தர்மம்..?

kumaragurupara


சாமியார்: 


நவுந்துராத நைனா... 
கவுந்துருவேன் நானு...  


சிங்கம்:

எல்லாமே ஒரு செட்டப் தானே சாமி... 
அதுக்காக நான் இரை தேடி ஒடும் போதும்,
நீ இதுபோல அசையாம குந்திக்கினு இருக்க முடியுமா என்ன..!


Monday, December 14, 2009

Answer to Tamilhindu

// மிசினரியார் நம்மை சந்திக்கும் போது அவர்களிடம் - சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, நாகரிக சமுதாயத்துக்கு எதிரானது - என்பதை நாம் விளக்க முடியும் // அன்பரே "மிஷினரி" எனும் சொல்லுக்கு இந்த நாகரீக உலகில் தேவையிருப்பதாகத் தெரியவில்லை; "மிஷினரி" என்ற சொல் வேற்று கலாச்சார மக்களிடையே தியாகத்துடனும் தன்னார்வத்துடனும் செயல்ப‌டுவோரைக் குறிக்கும் சொல்லாகும்; அந்த வகையில் பரந்துவிரிந்த இந்தியத் தாய்த் திருநாட்டில் சுயாதீன வழிபாட்டு உரிமையினைப் பெற போராடும் சுதேசிகளே அதிகம்; சடங்கு ஆச்சாரங்களால் அலுத்துப் போன சுதேசிகளே மாற்றத்தை விரும்பி அதைத் தேடுகையில் தடுக்கப்படுகிறார்கள்..!

Sunday, December 13, 2009

Thoughts: தத்துவ மலர்கள்

மாணவர்களுக்கு டிப்ஸ்:

இன்று காலை பிரார்ததனை நேரத்தில் (13.12.2009)வெளிப்பட்ட வார்த்தைகள்; "ஆண்டவரே,எங்கள் மாணவர்களுக்கு...
வெற்றியின் மீதான விருப்பத்தைத் தாரும்; 
வெற்றிக்கான ஆயத்தத்தைத் தாரும்; 
வெற்றியைக் குறித்த தரிசனத்தைத் தாரும்"


http://chillsam.wordpress.com/



Saturday, December 5, 2009

Who is Napkinnai..?


“கன்னியர் குலத்தின் மிக்கார் 
                                             கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் 

                                             முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை 

                                              முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு 

                                               என மனத்து எண்ணினானே.”
இது என்ன… அந்த கால ஆணாதிக்க சமுதாயத்தின் விரகதாபத்தை -அருவருப்பான வருணனைகளுடன் வெளிப்படுத்தும் ஒரு பிதற்றல்..!
இதற்கொரு ஆராய்ச்சி வேறா..?
ஒரு கன்னிப் பெண்ணைக் கருவாக வைத்துக் கொண்டு அவள் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பத்தினியா, தங்கையா, மகளா என விவாதிக்க வெட்கமில்லை..?
வீட்டுல ஆயிரத்தெட்டு ஓட்டைய வச்சுண்டு வானத்து விண்மீன பாத்து வானத்துல ஓட்டைன்னானாம், ஒருத்தன்..!
நாகரீக சமுதாயத்துக்கு உதவாத இந்த காட்டுமிராண்டி மார்க்கத்துக்கு இனியும் சப்பைக் கட்டுகள் தேவையா..?