Friday, September 25, 2009

Answers To tamilhindu



// "First of all, God cannot be realised by this kind of quarrels. My concern is Hindu society and the moment the Hindu society dwindles, there will be end to free thinking and individual preference. In every human activity, religion will poke its nose." // >MALARMANNAN  

அப்படியானால் மக்கள் சுதந்தரமாக சிந்திக்க ஏதுவாக அவரவர் தங்கள் தங்கள் மார்க்க கருத்துக்களை மற்றவர் மனம் புண்படாமல் பிரச்சாரம் செய்யட்டுமே; மதமாற்ற குற்றச்சாட்டுக்கும் ஒரு முடிவு வரட்டும்; கேள்விப்படாவிட்டால் எப்படி விசுவாசிப்பார்கள்..?  

டிவியில் எத்தனையோ விளம்பரங்கள் வருகிறது;  
எல்லா பொருளுமே வியாபாரம் ஆகிறது;  


ஆதி சங்கரர் முதலாக புனிதப பயணம் சென்று பிரச்சாரம் செய்தே மார்க்கத்தை வளர்த்தனர்; எனவே திரு.மலர்மன்னன் அவர்கள் கருத்தை நான் மனதார வரவேற்கிறேன்..! ஸ்ரீ ராம அ(பயம்)..?
===============================================================================


// People like Chellappa are richly compensated to harvest “souls” from Hindus. I put him very simple questions only. 1. What is his source of income. 2. How come he is able to frequently tour abroad. 3. Howcome anybody is born a sinner and sex is a sin. 4. If you say anybody a sinner by birth or even before being in the process of being born that is during intercourse by his/her would be father and mother, will it not amonut to create inferiority complex in the mind right from a tender age. 5. What is the fun in creating everybody a sinner and then redeeming everyone through Bible, which is creation of human beings. Has God nothing else that he should waste his time in such meanigless game? Why Chellappa, you can also answer these questions except the first two ones, as it is not difficult for anyone to understand by your answers. //  


ஆம், இந்துக்களல்ல அவர்களின் ஆன்மாவே விலையேறப்பெற்றது; 
அதை ஆதாயம் செய்ய எவ்வளவு கொடுத்தாலும் தகும்; 
ஏனெனில் அவர்களே மெய்யான பக்தியுள்ள ஜனம்;  
மற்ற கேள்விகளுக்கு பன்றி காய்ச்சலே (swine flu)உதாரணம்..!

Free Web Counters

இதுதான் இந்து மார்க்கமா..?



இதுதான் இந்து மார்க்கமா..?
இது நான் "தமிழ் ஹிந்து " தளத்தில் பெற்றுக்கொண்ட விளக்கம்....


அரவிந்தன் நீலகண்டன்
24 September 2009 at 6:54 pm


//இந்த கருத்தை இந்து மார்க்க ஞானத்துடன் தான் பதிக்கிறீர்களா?
வெளியே அனைத்தும் மாறலாம்;
உள்ளே எதுவும் மாறவில்லை;
அதுவே உயிரின் இரகசியம்;
சிருஷ்டி கர்த்தாவைப் பழித்து எந்த கிரகத்தில் சென்று குடியேறப்போகிறோம்;
உத்தரமண்டலத்தினை அந்தரத்தில் தொங்கவிட்டது யாரென்று எண்ணுகிறீர்கள்..?//
இது என்னுடைய கேள்வி;
அதற்கு நான் பெற்றுக்கொண்ட பதில் ஆச்சரியமானது...


சிருஷ்டி கர்த்தா என்று ஒருவன் இருந்தால்தானே அய்யா பழிப்பதற்கு … 
இந்த கருத்தை ஹிந்து மார்க்க ஞானத்துடன்தான் பதிக்கிறேனா என்கிறீர்கள்…
சாங்கியம் படைப்புக்கடவுளை மறுக்கிற தத்துவ அமைவு என்பதையும், 
யோகத்தில் ஈஸ்வரன் என்பது ஒரு principle தானே ஒழிய சிருஷ்டி கர்த்தர் இல்லை என்பதையும், சிருஷ்டி கர்த்தர் என்பது ஒரு தொடக்கநிலை  pedagogic கருவியாக மட்டுமே ஹிந்து ஞான மரபில் பயன்படுத்தப்பட்டு பின்னர் பிரக்ஞையே அனைத்துமாக காட்டப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு தெரியாதிருப்பதில் அதிசயமில்லை. 


சரி அதுதான் போகட்டும் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கும் 'நாஸதீய ஸூக்தம்' எனும் இந்த சிருஷ்டி கர்த்தர் என்கிற கருத்தாக்கத்தை எப்படி சிறுகுழந்தை தன் மரப்பாச்சி பொம்மையை வயதாகும் போது தூக்கிப் போட்டுவிட்டு செல்வது போல எளிதாகவும் அழகாகவும் கடந்து செல்கிறது என்று பாருங்கள். 


டார்வினின் பரிணாம அறிவியல் “நானே கர்த்தர் உன்னைப் படைத்தவன்” என மார் தட்டும் சிருஷ்டி தெய்வத்துக்கு தலையில் கொடுத்த குட்டு, உண்மையில் ஹிந்து தொன்மங்களில் முருகன் :”நானே சிருஷ்டி கர்த்தன்” என பிதற்றிய பிரம்மனுக்கு கொடுத்த குட்டின் எதிரொலி அல்லவா… 


பாவம் யஹீவாவும் அவரது ஒரே சீமந்த புத்திரனும் இன்னும் அந்த குட்டில் பொறி கலங்கி தள்ளாடுகிறார்கள்; நான் சொல்வதெல்லாம்…தள்ளாட்டத்தை எங்கள் மண்ணில் செய்யாதீர்கள்….மேற்கிலேயே வைத்துக்கொள்ளுங்கள்…
கர்த்தராம் படைத்தாராம்…
இரத்தத்தால் பாவத்தை துடைத்தாராம்…
அட போங்கப்பா போய் வேலையை பாருங்கள். 
பைபிளையும் மதவெறியையும் பரப்புவதைக் காட்டிலும் கிராமம் கிராமமாக போய் 
பசு மூத்திரத்தையும் 
பசுசாணத்தையும் 
பாலையும் 
மோரையும் விட்டு பஞ்ச கவ்யம் தயாரிக்க விவசாயிகளுக்கு சொல்லி கொடுங்க…விஷமில்லாத சோறையாவது சாப்பிடலாம்."


அப்படியானால் இந்து மார்க்கம் நாத்திகத்தை விட மோசமானதா..?
கடவுள் என்ற நற்பொருளை வைத்து மோசடி செய்கிறார்களா?
ஆனால் பைபிள் சொல்லுகிறது,
"ஜீவ மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்,உம்முடைய வலது பாரிசத்தில் நித்தியப் பேரின்பமும் உண்டு. "
(சங்கீதம்.16:11 )

இது தான் நமக்கு ஆறுதலையும் தைரியத்தையும் தருகிறது..! 

















Free Web Counters

HTML Hit Counters


Wednesday, September 23, 2009

"தமிழ் ஹிந்து"- "இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்"



"தமிழ் ஹிந்து" தளத்தில் நான் பதிக்கும் பின்னூட்டங்களில் சில பதிக்கப்படாவிட்டாலும் எனது முயற்சி வீணாகக் கூடாதே என யோசித்து இதனை வாசகர் முன்பு சமர்ப்பிக்கிறேன்; இங்கே நியாயமான நேர்மையுடன் நட்புணர்வுடன் விவாதிப்போம்.


இது "இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்" என்ற தொடுப்பு சம்பந்தமான பின்னூட்டமாகும்.


// நான் இங்கு பயன்படுத்தியுள்ள குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ள நூல்கள் - ஆசிரியர் இவர்களை நீங்கள் கண்டிருப்பீர். பைபிள் பேராசிரியர்கள் போன்றோரும் பைபிள் துறையில், அகழ்வாய்வு இவற்றில் உலகம் முழுதும் மதிக்கும்படியானவர்களை நான் பின் பற்றுகிறேன் //  


இதுதான் எனது வேண்டுகோளுக்கான பதிலா? ஏமாற்றம்..! நான் கேட்டது,புரியவில்லையா? ஆராய்ச்சி செய்பவரின் வயது,நோக்கம்,சூழ்நிலை இவையே நான் கோரியது;


பைபிள் அதனை நம்புப‌வருக்காகக் கொடுக்கப்பட்டது; யாரையும் நம்ப வைக்க செயற்கையாகப் புனையப்பட்டதல்ல‌;  


உதாரணமாக எனது முப்பாட்டனார் எழுதியதாகச் சொல்லி ஒரு அருமையானதொரு வாழ்வியல் தத்துவக் கோட்பாட்டை அவருடைய முப்பாட்டனார் வரலாற்றுடன் கூடிய ஒரு படைப்பை எனது தகப்பனார் என்னிடம் கொடுத்தால் அதில் என்ன சூழ்ச்சியும் உள்நோக்கமும் இருக்கமுடியும்?  


அது நேர்மையுடன்- அன்புடன் குடும்ப சொத்தாக என்னிடம் வந்து சேர்ந்தது; அதனைப் பாதுகாத்து எனது கொள்ளுப் பேரன் கடைபிடிக்கச் செய்ய‌வேண்டியது என்னுடைய கடமையல்லவா?  


இதனைக் குறித்து எதுவும் அறியாத ஒரு "பொறம்போக்கு" வந்து இப்படி ஒரு வம்சமே உலகில் வாழ்ந்ததற்கான ஆதாரமில்லை என்றால் என்ன அர்த்தம்? உங்களுக்கும் இதுவே எனது பதில்..!  


இதற்காகவே இறைவனும் இறைமகனுமான இயேசுகிறிஸ்து சொல்லிச் சென்றார், "மனிதன் உலக முழுவதையும் ஆதாயம் செய்தாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன இலாபம் என்ன?" என்று.  


நீங்கள் இதுகூட "கார்ல் மார்க்ஸ்" சொன்னதாக ஒரு அறிஞர் ஆராய்ச்சியில் எழுதியிருக்கிறார் என்பீர்கள்; 


வரவர "ஜூனியர் விகடன்" கழுகார் போலிருக்கிறது உங்கள் கருத்துக்கள்..!  


நீங்கள் மாணவரல்ல,முந்திரிகொட்டை..! 
காரணம் மாணவர் இங்கே எழுதமாட்டார்; 
அவருக்கு ஆராய்ச்சிக்கும் படிப்புக்குமே நேரம் சரியாக இருக்கும் என்பது எனது யூகம்;  


ஜோதிடத்தை நம்பும் மனிதன் வேதத்தை நம்பக்கூடாதா? 
பைபிள் பொய்யாக இருக்குமானால் அடுத்து தாங்கள் நிச்சயமாக இஸ்லாமியரிடம் வகையாகச் சிக்கிக் கொள்வீர்கள்; ஏனெனில் அவர்களின் வேதமான குரானுக்கு அடிப்படையே பைபிள்தான்..!





Free Web Counters


HTML Hit Counters




Tuesday, September 22, 2009

Hindhuthva- myth





"மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பார்களே அது போல மேற்கண்ட படத்தைக் குறித்து பரபரப்பான செய்தி ஒன்றை "தினமலர்" நாளிதழ் வெளியிட, அதை "தமிழ் ஹிந்து" தளமும் வெளியிட்டிருக்கிறது;  


ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: 
மக்கள் அதிருப்தி  
செப்டம்பர் 20,2009,00:00 IST  


தேவாரம்: ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம், கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. முழுக்க விவசாயம் சார்ந்த இந்த பகுதியில் காய்கறிகளை மொத்த விற்பனை செய்ய 42 கமிஷன் கடைகள் உள்ளன. இங்கிருந்து கேரளாவிற்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் காய்கறி அனுப்பப்படுகிறது. 


நேற்று, கமிஷன் கடைகளிலிருந்து விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் சிலவற்றில் மதப்பிரசாரம் சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டிருந்தன. இதைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். 


பத்து ரூபாய் நோட்டில் காந்தி படம் அச்சிடப் படும் வாட்டர் மார்க்கில் வெள்ளை நிறத்தில் வெற்றிடம் இருக்கும். இந்த பகுதியில் "நீ பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்.ஏசா: 41:10 "என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளன. 


ரூபாய் நோட்டில் உள்ள வாட்டர் மார்க் பகுதியை அளவெடுத்து அதற்கு தகுந்தாற் போன்ற சீல் தயார் செய்து ரூபாய் நோட்டில் புளுக்கலரில் அச்சிட்டுள்ளனர். 


ரூபாய் நோட்டில் எழுதுவதற்கே தடை உள்ள நிலையில் மதப்பிரசார வாசகங்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  


இதற்கு ரொம்ப பொறுப்பாக சில வாசகர்கள் கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவிக்கிறார்கள்:

>Dear sir, This act is too bad. It should be investicated and the person''s must be punished.  
by Fr.Augi ,India 
Posted on செப்டம்பர் 20,2009,13:06 IST  


>Goverment must findout the particular groups and give punishment ,heavy finedup thats good for our country.otherwise the stupid people cannot be change. 
by D sara,India 
Posted on செப்டம்பர் 20,2009,12:40 IST  


இது எப்படி மதப் பிரசார வாக்கியமாகும்? புரியவில்லையே..! 
அதில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் குறித்து எதுவும் இல்லையே..! இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது..?  


கரன்சியே எல்லா பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது; அதற்காக சிரமப்படும் ஏழை எளிய மக்கள் ஆறுதலடையவோ மன அமைதியடைவோ கூடாதா? எவ்வளவு கெட்ட எண்ணம் பார்த்தீர்களா?  


'இந்துவா' எனும் மதவெறி இந்த அளவுக்கு ஏழை இந்தியாவைப் பாடாய்ப்படுத்துகிறது.

http://www.dinamalar.com/Pothunewsdetail.asp?News_id=17151


Free Web Counters


HTML Hit Counters

Tuesday, September 15, 2009

Why Brahmins became christian..?

ஏன் பிராமணன் கிறிஸ்தவனாகிறான்..?
அண்மையில் எதோ ஒரு (google) தேடலின் போது "தமிழ் ஹிந்து"(tamilhindu) எனும் தளத்தில் நுழைய நேர்ந்தது; அதில் இருந்த விஷயங்களை மேலோட்டமாகப் பார்த்து கடந்து போனேன்;


ஆனாலும் ஏதோ ஒன்று மனதில் நெருட காமெண்ட் பகுதியில் எனது கருத்துக்களைப் பதிவு செய்ய துவங்கினேன்; அதிக பாதிப்பில்லாத ஒரு சிலதை பதித்தாலும் பெரும்பாலான கருத்துக்களை உள்நோக்கத்துடன் புறக்கணித்தார்கள்;


நடுநிலையான தளம் இதுவல்ல என்பதனைப் புரிந்துக்கொண்டு விலக முயற்சித்தேன்; ஆனாலும் அங்கே இருந்த விஷயங்கள் மனதைப் பாடாய் படுத்தியது;


வெறும் காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தாய் பிள்ளைகளான இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் குறுகிய எண்ணத்துடன் விஷ வித்துக்களைத் தூவிக் கொண்டிருக்கிறார்கள்;


தாங்கள் கற்றறியாத காரியங்களைத் துணிகரமாகத் தூஷித்தும் அவர்களது நம்பிக்கைகளைக் குறித்து ஏதாகிலும் கேட்டால் அதற்கு சரியான பதில் சொல்லாமலும் இது போல பக்கங்கள்;


அந்த தளத்துக்காக ஆயத்தம் செய்த பதில்களையே கட்டுரையாக்கி வாசகர் முன்பு சமர்ப்பிக்கிறேன்; (To be Contd...)


Free Web Counters


HTML Hit Counters