Monday, November 16, 2009

Comments on “வந்தேமாதரம்” Part.2




 இந்த தளத்தில் எனது கடைசி முயற்சியாக இருக்கட்டும்; ஏனெனில் தனிப்பட்ட முறையில் ஒரு பாவமும் அறியாத குடும்பப் பெண்களான எம் முன்னோர்களை சிலர் தாக்கும் போது மன வேதனையாக இருக்கிறது;


 Sarang :


//அப்போ நீர், அசோக் குமார் கோபாலன், அப்புறம் இங்கே வந்து வாரி இறைக்கும் ஏனையவர்கள் எல்லாரையும் டேரக்டா ஏசுவே வானத்துலேருந்து தூக்கி போட்டாரா - எலே அம்புட்டு பேறும் நேத்து வரைக்கும் மாரியாத்தாவ கும்பிட்ட பயலுவ இன்னிக்கு ஏதோ மேரி ஆத்தாவ கும்பிரானுவா...இன்கா இருக்கும் பலர் சுவிசெஷ கூட்டதால் சலவை செய்யபட்டு தானாகவே மதம் மாரியவர்கல் அல்லது போர்களின் போது படையினர் அரக்கத்தனமாக சாத்தானின் பிள்ளைகளாக மாறி எமது பெண்களை கற்பழிததன் விளைவால் வந்தவர்கள் தான் //


மாற்றுக் கருத்து இங்கே இருக்கக் கூடாது என்றால் முழுவதுமாக என்னை தடைசெய்து ஒரு மெயில் அனுப்பவும்; அல்லது முக்கியமானதை வெட்டிவிட்டு ஒரு சில கொம்பு சீவும் கருத்துக்களை மட்டும் வெளியிடும் போக்கு வேண்டாமே;
“வந்தேமாதரம்” பாடுவதைக் குறித்த எனது பொதுவான- சமூக அவலங்கள் சார்ந்த எனது பார்வையைத் தான் பதிவு செய்திருக்கிறேன்;
இதோ சொல்லுகிறேன்; “வந்தே மாதரம்” பாடியே எனது தேசபக்தியினை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது எனது கருத்து; ஏனெனில் அது ஒரு மார்க்க நம்பிக்கை சார்ந்த பாடல் என்று பெரியவர்களே அதனைத் தள்ளிவிட்டு மற்றொரு பொதுவான பாடலை தேசிய கீதமாக அங்கீகரித்து விட்டார்கள்;
“வந்தேமாதரம்” என்று சொல்லும் போது வரும் தேசிய உணர்வு “அல்லேலூயா” என்று சொன்னால் வராதா?
நான் நம்பும் ஏக இறைவன் பெண் தன்மைக்கும் ஆண் தன்மைக்கும் அப்பாற்பட்டவர்; விவரிக்க இயலாதவர்; எங்கும் நிறைந்தவ‌ர்;



bharat_mata_tshirtஏக தெய்வமான அவரையும் தொழுதுகொண்டு பெண் ரூபத்தில் சிங்கத்தின் மீது பவனி வரும் திலகமிட்ட ஒருத்தியை மாதாவாக்கி அவள் கையில் ஒன்று(படுத்தப்)பட்ட இந்தியாவின் தேசிய கொடியைக் கொடுத்து வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?


இது நான் கண்டு பேசிப் பழகிய தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட மகாத்மாவையே நான் வணங்காத போது கற்பனை உருவத்தை வணங்குவதாகக் கூறும் பாடலை எப்படி பாட முடியும்?
இந்தியாவை நான் நேசிக்கிறேன்; இந்தியாவின் முன்னேற்றத்துக்காக நானும் சிந்திக்கிறேன்; உழைக்கிறேன்; இது எனது தேசிய உணர்வு; அதற்கும் இந்த பாடலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை;


வள்ளுவன்:

// கிளாடி அவர்களே, பெரிய அறிவாளி என்று நினைப்பா உங்களுக்கு? //
நண்பர் கூறுவதுபோல ரொம்ப புத்திசாலித்தமாக எதையும் நான் எழுதிவிடவில்லை;
திரு.ரகுமான் முஸ்லிமாக “வந்தே மாதரம்” பாட‌வில்லை என்பதையே கூறினேன்; எனவே அவர் பாடிவிட்டார் என்பதற்காக அனைத்து இஸ்லாமியரும் பாடவேண்டும் என்ற அவசியமுமில்லை;
நாகூர் தர்காவில் நடப்பதெல்லாமே இஸ்லாத்துக்கு ஏற்புடையது என்பதும் குழந்தைத்தனமான கூற்றாகும்; தைரியமிருந்தால் அவர்களுடன் நெருங்கிப் பழகிப் பாருங்கள்;அவர்களிலும் பல பிரிவுகளுண்டு;
அவர்களில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை “தவ்ஹித் ஜமாத்”தார் பல சிறப்பான சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்;அதில் நாகூரில் நடக்கும் கூத்துகளுக்கு எதிர்த்துப் போராடுவதும் ஒன்றாகும்;
indian-national-flagஇறுதியாக, கொடியேற்றி தேசிய நாளை நினைவுகூறும் நாடுகளிலெல்லாம் ஏதோ ஒரு பொம்பளையைப் புகழ்ந்து பாடியே விழாவை நடத்துகிறார்கள் என்று அர்த்தமல்ல; அவரவர் மார்க்க நெறிகளின் படி அந்த ஒருமைப்பாட்டு விழாவை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்;
இந்தியாவோ அப்படியல்ல; இது பல்வேறு மொழியினக் கலாச்சாரங்களைக் கொண்ட நாடாதலால் இங்கே ஒரு குறிப்பிட்ட மார்க்க நம்பிக்கை சார்ந்த பாடலை தேசிய கீதமாக்க முயற்சிப்பது மீண்டும் கலகத்துக்கும் பிரிவினைக்குமே வழிகோலும்;


நியாயமாக பெரும்பான்மை இந்துக்கள் தங்கள் வீணான பாரம்பரிய சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்துவிட்டு வாழ்வியல் கருத்துக்களை வலியுறுத்தும் நாகரிக மார்க்க நெறிமுறைகளைக் கடைபிடிக்க முன்வரவேண்டும்; ஏற்கனவே முன்னேறிச் சென்று கொண்டிருப்பவர்களை பின்னுக்கு இழுக்க முயற்சிக்கக் கூடாது;
இந்து மார்க்கமானது ஏழை எளிய மக்களின் வாழ்வியல் அச்சங்களைக் காசாக்கி சுரண்டி பிழைக்கும் மடாதிபதிகளின் கொள்ளை கூடாரம்; அது இனி மெல்ல அழிந்துதான் போகும்;அதேயே பாரதியும் தன் கனவாக இதே “வந்தேமாதரம்” பல்லவியை வைத்தே பாடுகிறான்; அது தெரியாமல் வெட்கமில்லாமல் உங்கள் தாறுமாறுகளுக்கு அவனையும் துணைக்கு அழைத்து மூக்கறுபடுகிறீர்கள்;
உங்களை சீர்திருத்த வந்த எல்லோருடைய முதுகின் மீதும் சவாரி செய்து மேலும் மேலும் விலகிப் போகிறீர்கள்; புத்தம்,ஜைனம்,சீக்கியம் போன்ற எந்த சீர்திருத்த மார்க்கத்திலும் பெண் தெய்வமில்லாத போது அவர்களும் உங்களோடு இருப்பதைப் போல மாயம் பண்ணுகிறீர்கள்;
இந்துத்வா வெறியர்கள் சிந்திக்கவேண்டும்; மனந்திரும்ப வேண்டும்..!

Friday, November 13, 2009

வந்தேமாதரம் ..!

B.R.ஹரன்
//
நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் 

செய்துள்ளார். //





திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசை வியாபாரி; அவர் இதனை தேசபக்திக்காகப் பாடியதாக சொன்னாரா? காசு வாங்கிக் கொண்டுதானே பாடினார்? மேலும் அவர் முழுமையான முஸ்லிமும் அல்ல; அவர் இந்து மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்; மதம் மாறியவர்;


சந்தியா ஜெயின்:
//
தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.//



சரி,இந்த கட்டுரையின் ஆசிரியர் அதனை வழிமொழிகிறாரா?
ரொம்ப சந்தோஷம்,பாரதத் தாயை நீங்களே கூறுபோட்டு விற்றுவிடுவீர்கள் போலிருக்கிறதே..!



அந்த கண்ணுக்குத் தெரியாத பாரதத் தாயின் விலாசத்தைக் கொடுங்கள்;
சற்று விவரம் கேட்கவேண்டும்..!



இருப்பதை வணங்கவோ மரியாதை செலுத்தவோ மனமில்லாத சமுதாயம் இல்லாத- மாயமான ஒன்றினை உருவகப்படுத்தி வணங்கச் சொன்னால் எப்படி முடியும்?


சுதந்தரத்துக்கு முன்பு மொழியினால்- இனத்தால்- மதத்தால் சிதறிக் கிடந்த இந்திய மக்கள் குழுக்களை ஒன்றுபடுத்த இதுபோன்ற முயற்சிகள் தேவைப்பட்டது; ஆனால் இன்றோ அது வெறும் சடங்காகிவிட்டதே..!


ஒரு திரைப்படத்தில் ஆச்சிமனோரமா என்று நினைக்கிறேன்வந்தே மாதரம் என்பதை வந்தேமாத்ரோம்அதாவது வந்து ஏமாத்துறோம் என்பார்கள்,பரியாசமாக; இன்றைக்கும் அதுதான் நடக்கிறது;


கொள்ளைக்காரர்களை ஒருங்கிணைக்கவே வெள்ளைக்காரன் வந்தானோ எனக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்ஒற்றை இலக்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் உண்மையான தியாகிகள்; சுதந்தரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளோ மனம் வெதும்பிய நிலையிலிருக்கின்றனர்; அவர்களுக்காக ஒரு துரும்பும் கிள்ளிப் போட மனமில்லாத நான் பாரத் மாதா கீ ஜேஎன முழங்கி ஆகப் போவதென்னவோ?


ரொம்ப ஒற்றுமையாக இருப்பதாகக் காட்டிக்கொண்டால் எங்கே அந்நியன் வந்து ஆக்கிரமித்து விடுவானோ என பயந்து போய் கிடக்கிறேன்…!


சிற்றெறும்பு கூட அணி வரிசையாகச் சென்றால் பார்க்க சகிக்காத மனிதன் அதன் மீது விஷப் பொடியினைத் தூவுகிறான்; இது போன்ற தற்கால உலக அமைப்பில் வந்தே மாதரம்பாடினால் மட்டும் தேசிய உணர்வு வந்துவிடுமா என்ன?


சந்தியா வந்தனம்செய்வதற்கே ஜன்னலைத் தேடும் சமுதாய அமைப்பில் ஒழுக்கம் சீர்கெட்டுப் போன கலாச்சாரத்தில் தேசிய உணர்வு வரவேண்டுமானால் எவன் யோக்கியன்,என்னை சொல்ல வந்துட்டேஎன்ற அரசியல் சகுனிகள் பாடும் பிரபலமான பாடலையே பாடவேண்டும்..!

Saturday, November 7, 2009

புண்பட்ட இந்து உணர்வு..?!

ஒரு டிவி டாக் ஷோ (Talk Show) இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாம்;
அதற்கு எதிராக அவர்கள் சார்பாக சிலர் எழுப்பும் கேள்விகள்...

>முஸ்லீம் பெண்கள் தங்கள் முகத்தை மூடி பர்கா அணிவது அவசியமா?


>இஸ்லாமியச் சடங்கான ‘சுன்னத்’ தேவையா?


>மொஹர்ரம் தினத்தன்று தங்கள் மார்பில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொள்ளும் மூட நம்பிக்கை அவசியமா?


>ரமலான் மாத விரதத்தினால் பயன் உண்டா இல்லையா?


>கிறுத்துவப் பாதிரிமார்கள் பாவாடை அணிவது எதற்காக? அவ்வாறு அணிவது அவசியமா? பாவாடையின் பயன் என்ன?


>மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்ட கிறுத்துவ தம்பதியர் பின்னர் அவற்றை அணிவது அவசியமா?


>தலித் கிறுத்துவர்களுக்கு பேராயர் பதவிகள் கொடுப்பதில்லையே, ஏன்? அவர்களுக்கு தேவாலயங்களில் தனியாக இருக்கைகள் கொடுத்து பிரித்து வைத்திருப்பது ஏன்? அவர்களுக்கு மயானங்களிலும் தனியாக இடம் ஒதுக்குவது ஏன்? உயர் சாதியினர்கள் அவர்களை தங்கள் சர்ச்சுகளில் அனுமதிப்பதில்லையே, ஏன்?


>மசூதிகளில் முஸ்லீம் பெண்களை அனுமதிப்பதில்லையே, ஏன்?


>உயிர்த்தெழுந்து வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் வரவில்லையே, ஏன்?


>இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்றும், இந்து ஆன்மீகச் சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்றும் பழித்த கிறுத்துவர்கள் சிரிதும் வெட்கமில்லாமல் இந்துக்களின் பழக்க வழக்கங்களைக் காப்பியடித்து கலாசாரக் களவு செய்வது ஏன்?


>மசூதிகளில் தமிழ் வழிபாடு செய்யாதது சரியா, தவறா? அராபிய மொழி தெரியாத தமிழ் முஸ்லீம்களும், முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்களும் எந்த மொழியில் தொழுவார்கள்?


இன்னும் பல பொருள்கள் சுட்டிக் காட்டலாம். இம்மாதிரியான பொருள்களில் விவாதங்களும், நிகழ்ச்சிகளும், நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வருமா? கட்டுரைகள் எழுத பத்திரிகைகள் முன்வருமா? விவாதத்திற்காகச் சுட்டிக்காட்டப்ப்பட்ட மேற்கண்ட தலைப்புகள், தொலைக்காட்சி நிறுவனங்களின் கோழைத்தனத்தையும், அயோக்கியத் தனத்தையும், மற்றும் ஹிந்துக்களின் வேதனைகளையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டனவேயன்றி, கிறுத்துவ, இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தவதற்காக அல்ல. மேற்கண்ட தலைப்புகளில் விவாதங்கள் நடந்தால் கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும் எவ்வளவு தூரம் மனம் புண்பட்டுப்போவார்களோ, அந்த அளவிற்கு இந்துக்கள் புண்பட்டு மனவேதனை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காகவே சொல்லப்பட்டன.

// Can the same Vijay TV conduct a program asking the muslim women if they are ready to live without the burqa, and show to people of a lady who courageously remove the burqa before the camera?
// இது ஒருத்தர்...


இதற்கு என்னுடைய பதில்...


இந்திய இந்து சமுதாயமானது பரந்துவிரிந்த இந்தியப் பெருங்கடலைப் போல மகா விஸ்தாரமானது; அதனைக் கட்டுப்படுத்தும் எந்த அமைப்பும் இந்த உலகில் இல்லை; இந்த மாபெரும் அமைப்புக்கு உயிர் கொடுத்து நடத்திச் செல்வதில் பெண்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது; அவர்களாலேயே இந்து மார்க்கம் இன்னும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்றும் சொல்லலாம்;


கடைபிடிக்கப்படும் அத்தனை சடங்குகளையும் வடிவமைத்து கடைபிடிப்பதிலும் அவர்கள் பங்கே சிறப்பானது; அல்லது அவர்களுக்காகவே அனைத்து சடங்குகளும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது; அப்படியானால் எதனைத் தொடரவேண்டும் எதனைத் தவிர்க்கவேண்டும் என்பதையும் அவர்களே முடிவுசெய்கிறார்கள்; எனவே தான் பக்தி மார்க்கத்தில் சக்தியை பிரதானப்படுத்துகிறோம்;


ஆனால் இஸ்லாத்திலோ கிறிஸ்தவத்திலோ அப்படியல்ல;
அங்கே பெண்களுக்கு சுதந்தரம் பேச்சளவில் கூட கிடையாது; அவர்களாக முடிவெடுத்து எதையும் செய்யமுடியாது; இந்நிலையில் பெண்கள் எப்படி முன்வந்து புர்காவை கழட்டமுடியும்? அதற்கும் தர்காவிலிருந்து உத்தரவு வரவேண்டுமே;


அதே போல இங்கே “பாவாடை”(பெண்கள் அணிவது; பாவம் அறியாமையினால் “அங்கி”யை “பாவாடை” என்று ஆசிரியர் குறிப்பிட்டுவிட்டார்..!) என்று சொல்லப்பட்ட அங்கியும் கூட கிறிஸ்தவ அமைப்பினால் திணிக்கப்பட்டதுதான்; அதுவும் இப்போது மாறிவருகிறது;


தன்னை வேறுபடுத்திக் காட்டுவதும் தனித்தன்மையுடன் இருக்கவிரும்புவதும் ஒவ்வொரு உயிருக்குமுள்ள சிறப்பான குணமாகும்;


தாலியைப் பற்றிய உயர்ந்த கருத்துக்கள் இருக்குமானால் அதனை அறியவும் இதுபோன்ற விவாதங்கள் உதவுமே; அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் சமுதாயத்தில் இதைக் குறித்த விழிப்புணர்ச்சி உண்டாகும்; சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ.


உதாரணத்துக்கு நமது தேசப் பிதாவான காந்திஜி வெள்ளையர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவரது ஆடையினிமித்தம் அவமானப்படுத்தப்பட்டாராம்; ஆனாலும் அவர் மனதளவில் அவமானப்பட்டதாகவோ மனம் புண்பட்டதாகவோ தெரியவில்லை;காரணம் அவருக்கு தன்மீது இருந்த திருப்தியுணர்வு;


அதே போல தாலி போன்ற சமுதாய சடங்குகளைக் குறித்த மரியாதை ஒருவருக்கு இருக்குமானால் ஏன் மனம் புண்படவேண்டும்? ஆனால் அதனைக் கட்டாயமாக சுமப்பதனால் அவமானப்பட்டு மனம் புண்பட வாய்ப்புண்டு;


தாலி,மெட்டி,பொட்டு என அனைத்திலும் பெண்களை வித்தியாசப்படுத்தும் சமுதாயம் ஆண்களுக்கு ஏன் ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை; அல்லது அவர்கள் ஏன் கடைபிடிக்கவில்லை; இதுவும் இந்து சமுதாயத்தின் சிறப்பானதொரு நடைமுறையாகும்; யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது; ஒவ்வொருவருக்கும் சுயாதீனமும் சுதந்தரமும் அளவில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது; விரும்பினால் ஆச்சாரமாக இருக்கலாம் அல்லது “டாஸ்மாக்”கிலும் கிடக்கலாம்; அது இறைவன் “உறங்கும்” ஆன்மாவை ஒன்றும் செய்யாது; இது புரியாமல் காசுக்காக யாரோ எவரோ எதையோ செய்தால் நமக்கென்ன..? (…என்று மேல்நாட்டு அறிஞர் யாரும் குறிப்பிடவில்லை; நானே எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்..!)


என்னுடைய கருத்தின் ஆழமும் வேதனையும் யாருக்குப் புரியவேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாகவே புரியும் என்று நம்புகிறேன்.


hit counter