Friday, January 29, 2010

மனிதம் எங்கே..?

 இது கரூர் மாவட்டத்தில் நடத்த உண்மை நிகழ்ச்சி;நான் இன்று வாசித்த என் மனதை மிகவும் பாதித்த ஒரு செய்தி;அதுவே இந்த தேசத்தின் மொத்த நிலைமைக்கும் பிரச்சினைக்கும் உதாரணமாக இருக்கும்;
சைக்கிளில் சென்ற ஒருவன் திடீரென தெருவின் குறுக்கே வந்த மூன்றே வயது சிறுமியைக் கண்டு தடுமாறி நின்றான்;அதே நேரம் அங்கு வந்த அந்த சிறுமியின் தகப்பனோ சைக்கிளில் வந்தவனை கெட்டவார்த்தைகளால் அர்ச்சிக்க- அமைதியாகப் போய்விட்டான்;

அடுத்த நாளும் அதே போல அந்த குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்க முந்தின நாளின் நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சைக்கிள்காரன் நேரே வீட்டுக்குச் சென்று கரும்பு வெட்டும் அரிவாளால் அந்த குழந்தையின் கழுத்தை வெறியுடன் அறுத்துப்போட்டான்;
குழந்தையின் தந்தை ஆட்டுக்கறிக்கடை வைத்துள்ள‌ ஒரு இஸ்லாமியர்;கொலைக்காரன் ஒரு இந்து; இதற்கு மதமா காரணம்?

கொலைக்காரன் சொல்லும் காரணம்,அந்த தந்தை  குழந்தையைக் கண்டிக்காமல் அவனைக் கண்டித்ததாலேயே குழ‌ந்தையைக் கொலை செய்தானாம்;

 

No comments:

Post a Comment