Friday, September 25, 2009

இதுதான் இந்து மார்க்கமா..?



இதுதான் இந்து மார்க்கமா..?
இது நான் "தமிழ் ஹிந்து " தளத்தில் பெற்றுக்கொண்ட விளக்கம்....


அரவிந்தன் நீலகண்டன்
24 September 2009 at 6:54 pm


//இந்த கருத்தை இந்து மார்க்க ஞானத்துடன் தான் பதிக்கிறீர்களா?
வெளியே அனைத்தும் மாறலாம்;
உள்ளே எதுவும் மாறவில்லை;
அதுவே உயிரின் இரகசியம்;
சிருஷ்டி கர்த்தாவைப் பழித்து எந்த கிரகத்தில் சென்று குடியேறப்போகிறோம்;
உத்தரமண்டலத்தினை அந்தரத்தில் தொங்கவிட்டது யாரென்று எண்ணுகிறீர்கள்..?//
இது என்னுடைய கேள்வி;
அதற்கு நான் பெற்றுக்கொண்ட பதில் ஆச்சரியமானது...


சிருஷ்டி கர்த்தா என்று ஒருவன் இருந்தால்தானே அய்யா பழிப்பதற்கு … 
இந்த கருத்தை ஹிந்து மார்க்க ஞானத்துடன்தான் பதிக்கிறேனா என்கிறீர்கள்…
சாங்கியம் படைப்புக்கடவுளை மறுக்கிற தத்துவ அமைவு என்பதையும், 
யோகத்தில் ஈஸ்வரன் என்பது ஒரு principle தானே ஒழிய சிருஷ்டி கர்த்தர் இல்லை என்பதையும், சிருஷ்டி கர்த்தர் என்பது ஒரு தொடக்கநிலை  pedagogic கருவியாக மட்டுமே ஹிந்து ஞான மரபில் பயன்படுத்தப்பட்டு பின்னர் பிரக்ஞையே அனைத்துமாக காட்டப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு தெரியாதிருப்பதில் அதிசயமில்லை. 


சரி அதுதான் போகட்டும் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கும் 'நாஸதீய ஸூக்தம்' எனும் இந்த சிருஷ்டி கர்த்தர் என்கிற கருத்தாக்கத்தை எப்படி சிறுகுழந்தை தன் மரப்பாச்சி பொம்மையை வயதாகும் போது தூக்கிப் போட்டுவிட்டு செல்வது போல எளிதாகவும் அழகாகவும் கடந்து செல்கிறது என்று பாருங்கள். 


டார்வினின் பரிணாம அறிவியல் “நானே கர்த்தர் உன்னைப் படைத்தவன்” என மார் தட்டும் சிருஷ்டி தெய்வத்துக்கு தலையில் கொடுத்த குட்டு, உண்மையில் ஹிந்து தொன்மங்களில் முருகன் :”நானே சிருஷ்டி கர்த்தன்” என பிதற்றிய பிரம்மனுக்கு கொடுத்த குட்டின் எதிரொலி அல்லவா… 


பாவம் யஹீவாவும் அவரது ஒரே சீமந்த புத்திரனும் இன்னும் அந்த குட்டில் பொறி கலங்கி தள்ளாடுகிறார்கள்; நான் சொல்வதெல்லாம்…தள்ளாட்டத்தை எங்கள் மண்ணில் செய்யாதீர்கள்….மேற்கிலேயே வைத்துக்கொள்ளுங்கள்…
கர்த்தராம் படைத்தாராம்…
இரத்தத்தால் பாவத்தை துடைத்தாராம்…
அட போங்கப்பா போய் வேலையை பாருங்கள். 
பைபிளையும் மதவெறியையும் பரப்புவதைக் காட்டிலும் கிராமம் கிராமமாக போய் 
பசு மூத்திரத்தையும் 
பசுசாணத்தையும் 
பாலையும் 
மோரையும் விட்டு பஞ்ச கவ்யம் தயாரிக்க விவசாயிகளுக்கு சொல்லி கொடுங்க…விஷமில்லாத சோறையாவது சாப்பிடலாம்."


அப்படியானால் இந்து மார்க்கம் நாத்திகத்தை விட மோசமானதா..?
கடவுள் என்ற நற்பொருளை வைத்து மோசடி செய்கிறார்களா?
ஆனால் பைபிள் சொல்லுகிறது,
"ஜீவ மார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்,உம்முடைய வலது பாரிசத்தில் நித்தியப் பேரின்பமும் உண்டு. "
(சங்கீதம்.16:11 )

இது தான் நமக்கு ஆறுதலையும் தைரியத்தையும் தருகிறது..! 

















Free Web Counters

HTML Hit Counters


No comments:

Post a Comment