Saturday, November 7, 2009

புண்பட்ட இந்து உணர்வு..?!

ஒரு டிவி டாக் ஷோ (Talk Show) இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாம்;
அதற்கு எதிராக அவர்கள் சார்பாக சிலர் எழுப்பும் கேள்விகள்...

>முஸ்லீம் பெண்கள் தங்கள் முகத்தை மூடி பர்கா அணிவது அவசியமா?


>இஸ்லாமியச் சடங்கான ‘சுன்னத்’ தேவையா?


>மொஹர்ரம் தினத்தன்று தங்கள் மார்பில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொள்ளும் மூட நம்பிக்கை அவசியமா?


>ரமலான் மாத விரதத்தினால் பயன் உண்டா இல்லையா?


>கிறுத்துவப் பாதிரிமார்கள் பாவாடை அணிவது எதற்காக? அவ்வாறு அணிவது அவசியமா? பாவாடையின் பயன் என்ன?


>மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்ட கிறுத்துவ தம்பதியர் பின்னர் அவற்றை அணிவது அவசியமா?


>தலித் கிறுத்துவர்களுக்கு பேராயர் பதவிகள் கொடுப்பதில்லையே, ஏன்? அவர்களுக்கு தேவாலயங்களில் தனியாக இருக்கைகள் கொடுத்து பிரித்து வைத்திருப்பது ஏன்? அவர்களுக்கு மயானங்களிலும் தனியாக இடம் ஒதுக்குவது ஏன்? உயர் சாதியினர்கள் அவர்களை தங்கள் சர்ச்சுகளில் அனுமதிப்பதில்லையே, ஏன்?


>மசூதிகளில் முஸ்லீம் பெண்களை அனுமதிப்பதில்லையே, ஏன்?


>உயிர்த்தெழுந்து வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் வரவில்லையே, ஏன்?


>இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்றும், இந்து ஆன்மீகச் சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்றும் பழித்த கிறுத்துவர்கள் சிரிதும் வெட்கமில்லாமல் இந்துக்களின் பழக்க வழக்கங்களைக் காப்பியடித்து கலாசாரக் களவு செய்வது ஏன்?


>மசூதிகளில் தமிழ் வழிபாடு செய்யாதது சரியா, தவறா? அராபிய மொழி தெரியாத தமிழ் முஸ்லீம்களும், முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்களும் எந்த மொழியில் தொழுவார்கள்?


இன்னும் பல பொருள்கள் சுட்டிக் காட்டலாம். இம்மாதிரியான பொருள்களில் விவாதங்களும், நிகழ்ச்சிகளும், நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வருமா? கட்டுரைகள் எழுத பத்திரிகைகள் முன்வருமா? விவாதத்திற்காகச் சுட்டிக்காட்டப்ப்பட்ட மேற்கண்ட தலைப்புகள், தொலைக்காட்சி நிறுவனங்களின் கோழைத்தனத்தையும், அயோக்கியத் தனத்தையும், மற்றும் ஹிந்துக்களின் வேதனைகளையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டனவேயன்றி, கிறுத்துவ, இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தவதற்காக அல்ல. மேற்கண்ட தலைப்புகளில் விவாதங்கள் நடந்தால் கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும் எவ்வளவு தூரம் மனம் புண்பட்டுப்போவார்களோ, அந்த அளவிற்கு இந்துக்கள் புண்பட்டு மனவேதனை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காகவே சொல்லப்பட்டன.

// Can the same Vijay TV conduct a program asking the muslim women if they are ready to live without the burqa, and show to people of a lady who courageously remove the burqa before the camera?
// இது ஒருத்தர்...


இதற்கு என்னுடைய பதில்...


இந்திய இந்து சமுதாயமானது பரந்துவிரிந்த இந்தியப் பெருங்கடலைப் போல மகா விஸ்தாரமானது; அதனைக் கட்டுப்படுத்தும் எந்த அமைப்பும் இந்த உலகில் இல்லை; இந்த மாபெரும் அமைப்புக்கு உயிர் கொடுத்து நடத்திச் செல்வதில் பெண்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது; அவர்களாலேயே இந்து மார்க்கம் இன்னும் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்றும் சொல்லலாம்;


கடைபிடிக்கப்படும் அத்தனை சடங்குகளையும் வடிவமைத்து கடைபிடிப்பதிலும் அவர்கள் பங்கே சிறப்பானது; அல்லது அவர்களுக்காகவே அனைத்து சடங்குகளும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது; அப்படியானால் எதனைத் தொடரவேண்டும் எதனைத் தவிர்க்கவேண்டும் என்பதையும் அவர்களே முடிவுசெய்கிறார்கள்; எனவே தான் பக்தி மார்க்கத்தில் சக்தியை பிரதானப்படுத்துகிறோம்;


ஆனால் இஸ்லாத்திலோ கிறிஸ்தவத்திலோ அப்படியல்ல;
அங்கே பெண்களுக்கு சுதந்தரம் பேச்சளவில் கூட கிடையாது; அவர்களாக முடிவெடுத்து எதையும் செய்யமுடியாது; இந்நிலையில் பெண்கள் எப்படி முன்வந்து புர்காவை கழட்டமுடியும்? அதற்கும் தர்காவிலிருந்து உத்தரவு வரவேண்டுமே;


அதே போல இங்கே “பாவாடை”(பெண்கள் அணிவது; பாவம் அறியாமையினால் “அங்கி”யை “பாவாடை” என்று ஆசிரியர் குறிப்பிட்டுவிட்டார்..!) என்று சொல்லப்பட்ட அங்கியும் கூட கிறிஸ்தவ அமைப்பினால் திணிக்கப்பட்டதுதான்; அதுவும் இப்போது மாறிவருகிறது;


தன்னை வேறுபடுத்திக் காட்டுவதும் தனித்தன்மையுடன் இருக்கவிரும்புவதும் ஒவ்வொரு உயிருக்குமுள்ள சிறப்பான குணமாகும்;


தாலியைப் பற்றிய உயர்ந்த கருத்துக்கள் இருக்குமானால் அதனை அறியவும் இதுபோன்ற விவாதங்கள் உதவுமே; அங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் சமுதாயத்தில் இதைக் குறித்த விழிப்புணர்ச்சி உண்டாகும்; சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ.


உதாரணத்துக்கு நமது தேசப் பிதாவான காந்திஜி வெள்ளையர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவரது ஆடையினிமித்தம் அவமானப்படுத்தப்பட்டாராம்; ஆனாலும் அவர் மனதளவில் அவமானப்பட்டதாகவோ மனம் புண்பட்டதாகவோ தெரியவில்லை;காரணம் அவருக்கு தன்மீது இருந்த திருப்தியுணர்வு;


அதே போல தாலி போன்ற சமுதாய சடங்குகளைக் குறித்த மரியாதை ஒருவருக்கு இருக்குமானால் ஏன் மனம் புண்படவேண்டும்? ஆனால் அதனைக் கட்டாயமாக சுமப்பதனால் அவமானப்பட்டு மனம் புண்பட வாய்ப்புண்டு;


தாலி,மெட்டி,பொட்டு என அனைத்திலும் பெண்களை வித்தியாசப்படுத்தும் சமுதாயம் ஆண்களுக்கு ஏன் ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை; அல்லது அவர்கள் ஏன் கடைபிடிக்கவில்லை; இதுவும் இந்து சமுதாயத்தின் சிறப்பானதொரு நடைமுறையாகும்; யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாது; ஒவ்வொருவருக்கும் சுயாதீனமும் சுதந்தரமும் அளவில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது; விரும்பினால் ஆச்சாரமாக இருக்கலாம் அல்லது “டாஸ்மாக்”கிலும் கிடக்கலாம்; அது இறைவன் “உறங்கும்” ஆன்மாவை ஒன்றும் செய்யாது; இது புரியாமல் காசுக்காக யாரோ எவரோ எதையோ செய்தால் நமக்கென்ன..? (…என்று மேல்நாட்டு அறிஞர் யாரும் குறிப்பிடவில்லை; நானே எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன்..!)


என்னுடைய கருத்தின் ஆழமும் வேதனையும் யாருக்குப் புரியவேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாகவே புரியும் என்று நம்புகிறேன்.


hit counter

No comments:

Post a Comment